காங்கிரஸ் கட்சியின் 136-வது ஆண்டு விழாவில் ராகுல் காந்தி கலந்துகொள்ளவில்லை.
காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்ட 136-வது ஆண்டு தினத்தை தவிர்த்துவிட்டு ராகுல்காந்தி தனிப்பட்ட முறையில் இத்தாலிக்கு சென்றுள்ளதாக விமர்சித்த பாஜகவினருக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ‘பாட்டியை சந்திக்கச் செல்வது தவறா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி 1885-ஆம் ஆண்டு இதேநாளில்தான் தோற்றுவிக்கப்பட்டது. இன்று அக்கட்சியின் 136 வது தொடக்க நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ராகுல் காந்தி நேற்று கத்தார் ஏர்வேஸில், இத்தாலியிலுள்ள தனது தாய்வழி பாட்டியை சந்திக்கச் சென்றுள்ளார். இதனை, பாஜக தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
இதற்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் “தனிப்பட்ட பயணம் மேற்கொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு. பாஜக தரம்தாழ்ந்த அரசியலில் ஈடுபடுகிறது. தனது பாட்டியை பார்க்கச் செல்வது தவறா? பாஜகவினர் காங்கிரஸில் ஒரு தலைவரை மட்டுமே குறிவைக்க விரும்புவதால் ராகுல் காந்தியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்” என்று தெரிவித்தார்.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?