இங்கிலாந்தில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்த 6 நபர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் பரவி வரும் உருமாறிய புதிய வகை கொரோனாத் தொற்றால், இந்தியா உட்பட பல நாடுகள் இங்கிலாந்தில் வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் இருந்து டெல்லி விமானநிலையத்திற்கு வந்த 6 நபர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அரசு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர்த்து, மேலும் 50 பயணிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனாத்தொற்று உறுதிசெய்யப்பட்ட பயணிகளின் மாதிரிகளில் தற்போது உருமாறியிருக்கும் புதிய கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிய, அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நேற்று இங்கிலாந்தில் இருந்து கொல்கத்தா, டெல்லி, அகமாதாபாத் ஆகிய இடங்களுக்கு வந்த 20 பயணிகளுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்
பரீட்சையில் திரைப்பட பாடல் எழுதியதால் கிண்டல், வெளியேற்றம்: மாணவர் எடுத்த சோக முடிவு
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மது அருந்தலாமா? - மருத்துவர் தரும் விளக்கம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!