மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் அறவழியில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கவனமும் இந்த போராட்டத்தின் பக்கமாக திரும்பியுள்ள சூழலில் மத்திய அரசும், போராடும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.
இந்த சந்திப்பில் மத்திய அரசு சார்பில் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் பஞ்சாப்பின் மக்களவை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த விவசாயிகளுக்கு மத்திய அரசு உணவு கொடுத்துள்ளது. இருப்பினும் அதை வேண்டாமென சொல்லி மறுத்ததோடு “நாங்கள் உணவு கொண்டு வந்துள்ளோம்” என தெரிவித்துள்ளனர் விவசாயிகள்.
இந்த பேச்சு வார்த்தையில் போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
“எங்களது கோரிக்கைகளுக்கு மத்திய அரசு சம்மதிக்கும் வரை போராட்டம் தொடரும். அதன் மூலம் அரசு ஏதேனும் செய்ய முன் வரும். அது எங்கள் மீது பாய்கின்ற துப்பாக்கி தோட்டாக்களா அல்லது போராட்டத்திற்கான தீர்வா என்பதை பார்க்க வேண்டும்” என கூட்டத்தில் பங்கேற்ற விவசாய பிரதிநிதி தெரிவித்திருந்தார்.
Loading More post
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்