ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன், தன்னை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் தலைமைச் செயலர், உள்துறை செயலருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ரவிச்சந்திரன் தாக்கல் செய்திருந்த மனுவில் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான சட்ட மசோதா மீது, ஆளுநர் விரைவில் முடிவெடுக்கக்கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று கூறியிருந்தார். 29 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் தன்னை விரைவாக விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இதே கோரிக்கையுடன் நளினி தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது, ரவிச்சந்திரன் மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசின் சார்பில் வாதிடப்பட்டது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 7.5 இடஒதுக்கீட்டில் ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திராமல் முடிவெடுத்தது போன்று இதிலும் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து தமிழக அரசின் தலைமை செயலர், உள்துறை செயலர் ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Loading More post
"மருத்துவர் சாந்தா எனக்கு தாய் போன்றவர்"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
“ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது” - அமைச்சர் கே.பி அன்பழகன்
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி இன்று சந்திப்பு
தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?