சென்னை தண்டையார்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்த கணவன் மனைவி உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோயில் தெருவில் இரவு நேரங்களில் அதிக அளவில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற வண்ணாரப்பேட்டை தனிப்படை போலீசார், சந்தேகத்துக்கிடமாக இருந்த வீட்டை நோட்டமிட்டனர். மேலும், வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கு பாலியல் தொழில் நடைபெறுவது தெரியவந்தது. இதனையடுத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த கணவன் மனைவி உட்பட 7 பேரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கணவனை பிரிந்து வாழும் பெண்களின் மனநிலையை பேசி மாற்றி இவ்வாறு தனியே அழைத்து தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. சஞ்சீவிராயன் கோவில் தெருவை சேர்ந்த 7 பேரை போலீசார் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
சிறுமிகளை வலுக்கட்டாயமாக கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது உறுதியானதையடுத்து தண்டயார்பேட்டை மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.
Loading More post
சசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி
“என் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” -சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்
சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று - மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதுபோல கர்நாடக மருத்துவர்கள் நடித்தார்களா? - உண்மை இதுதான்
புனே சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!