தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான 250 கிலோ போதைப்பொருள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கொட்டிவாக்கத்தில் உள்ள கிடங்கு ஒன்றில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பதுக்கி வைத்து பல்வேறு கடைகளுக்கு விநியோகம் செய்வதாக நீலாங்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கொட்டிவாக்கத்தில் உள்ள கிடங்கில் நீலாங்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தமிழன்பன் தலைமையில், காவலர் இன்பராஜ் உள்ளிட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 250 கிலோ குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நீலாங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை