சென்னையில் நாளை முதல் சர்வதேச விமான சேவை தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தளர்வுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் நாள்தோறும் புதிய தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று தமிழகத்தில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் 25 உள்நாட்டு விமானங்கள் வெளி மாநிலங்களிலிருந்து இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் நாளை முதல் சென்னையிலிருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9.25 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு இயக்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து சென்னை உள்நாட்டு முனையத்தில் இருந்து மொத்தம் 40 விமானங்கள் வருகை மற்றும் புறப்பாட்டிற்கு இயக்கப்பட உள்ளன. இதற்கிடையே காலை 5.05 மணிக்கு முதல் விமானமாக ஏர் இந்தியா அந்தமான் செல்கிறது. இவை சிறப்பு விமானங்கள் இல்லை எனவும், வழக்கமான பயணிகள் சேவை தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
தொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்!
மறைந்த மாதவராவ் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி
"கலப்படமில்லாத காங்கிரஸ்காரர்!" - மாதவராவ் மறைவுக்கு பீட்டர் அல்போன்ஸ் புகழஞ்சலி
அரக்கோணம் இரட்டைக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய விசிகவினர் மீது வழக்குப் பதிவு
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்