தனக்காக இன்னும் ஒரு உலகக் கோப்பை தொடர் இருப்பதாக இந்திய அணியின் பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் அதிரடி பேட்ஸ்மேன் என்ற பெயரை குறுகிய காலத்திலேயே பெற்றவர் ராபின் உத்தப்பா. குறிப்பாக டி20 போட்டிகளில் சில பந்துகளை மட்டுமே சந்தித்தாலும் பவுண்டரிகளை விளாசும் நபராக இருந்தார். ஆனால் நீண்ட நாட்கள் இவர் இந்திய அணியில் தாக்குப்பிடிக்கவில்லை.
வீரர்களுக்கு இடையேயான பேட்டிங் போட்டியில், அணியிலிருந்து வெளியேறினார் ராபின் உத்தப்பா. 2006ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அடியெடுத்து வைத்த ராபின், 2015ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக நடந்த டி20 போட்டிக்குப் பின்னர் இன்னும் எந்தச் சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை. இதற்கிடையே ஐபிஎல் போட்டிகளில் அவர் களமாடி வருகிறார்.
இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் தனது விருப்பம் தொடர்பாக ராபின் உத்தப்பா மனம் திறந்துள்ளார். இ.எஸ்.பி.என் இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “தற்போது நான் களமாட வேண்டும். எனக்குள் இன்னும் ஒரு நெருப்பு எரிந்துகொண்டு தான் இருக்கிறது. நான் உண்மையிலே விளையாட வேண்டும் மற்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். எனக்காக ஒரு உலகக் கோப்பை (2020ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை) இன்னும் இருக்கிறது என நான் உறுதியாக நம்புகிறேன். எனவே தான் இன்னும் முயன்று கொண்டிருக்கிறேன். குறிப்பாக, டி20 தொடரில் பங்கேற்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
ஐபிஎஸ் அதிகாரிக்கே இவ்வளவு சிக்கலென்றால் சாதாரண பெண் காவலர்கள் நிலை என்ன?- உயர் நீதிமன்றம்
மார்ச் 7-ல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்: சீமான் அறிவிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?