பெயர் வெளியிட விருப்பமில்லாமல் தூய்மை பணியாளர்கள் நலனுக்காக ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்த நபர் குறித்து பிராந்திய துணை ஆணையர் ஆச்சரியம் தெரிவித்துள்ளார்
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 886ஆக உள்ளது. அதில் 76 பேர் குணமடைந்துள்ள நிலையில் 791 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.19 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளை கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வரும் வேளையில் பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன.
இந்தியாவும் ஊரடங்கு உத்தரவு, வீடுகளுக்குச் சென்று கிருமிநாசினி தெளித்தல் என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல ஊழியர்கள் நேரம் காலம் பார்க்காமல் கொரோனாவுக்கு எதிராக பணியாற்றி வருகின்றனர்.
ஊரடங்கால் உணவின்றி தவித்த குரங்குகள்.. கருணை காட்டிய இளைஞர்கள் : குவியும் பாராட்டு..!
குறிப்பாக தூய்மை பணியாளர்கள் தங்களது பெரும் உழைப்பை கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு milaap என்ற இணையப்பக்கம் நிதி திரட்டி வருகிறது. பலரும் இந்தப்பக்கத்தில் நிதி அளித்து வருகின்றனர்.இந்தப்பக்கத்தில் பெயரிட விரும்பாத ஒருவர் ரூ.2 லட்சம் நிதி அளித்துள்ளார்.
இதனை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ள சென்னை மாநகராட்சியின் பிராந்திய துணை ஆணையர், தூய்மை பணியாளர்களுக்கு நிதி திரட்டும் பக்கத்தை நான் பகிர்ந்திருந்தேன். இதுவரை அதில் 8.3 லட்ச ரூபாய் சேர்ந்துள்ளது. அதில் என்னை ஆச்சரியப்பட வைத்தது என்னவென்றால், பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் எந்த பலனையும் எதிர்பார்க்காமல் ரூ.2 லட்சம் கொடுத்து உதவியுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Yesterday I shared this link about a @milaapdotorg campaign for the sanitary workers.
While they were able to collect 8.3 lakhs till now, what surprised me more is that someone donated Rs. 2 lakhs for the compaign.
That too anonymously without seeking any credits. #RealHeroes pic.twitter.com/cn6xBlNHmq — Alby John (@albyjohnV) March 27, 2020
Loading More post
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
ஜனவரி 21-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்