அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வருவதை முன்னிட்டு தெலங்கானாவை சேர்ந்த பஸ்சா கிருஷ்ணா என்ற விவசாயி தனது வீட்டில் ட்ரம்பின் சிலை ஒன்றை நிறுவியுள்ளார்.
6 அடி உயரமுள்ள ட்ரம்பின் சிலையின் நெற்றியில் திலகம் வைத்து, மாலை அணிவித்து தினம் ஆரத்தி அபிஷேகம் செய்து வழிபட்டு வருகிறார். ட்ரம்ப் ஒரு வலிமையான தலைவர் எனக்கூறும் விவசாயி கிருஷ்ணா, அவரது துணிச்சலான செயல்பாடுகள் பிடித்ததால் அவருக்கு சிலை வைத்ததாக கூறுகிறார். இதனை அமைக்க கிருஷ்ணா ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவிட்டதாக கூறப்படுகிறது.
காலில் காயத்துடன் திரியும் புலி - அச்சத்தில் மக்கள்..!
மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வருவதையடுத்து ட்ரம்பின் பாதுகாப்பு வாகனம் அகமதாபாத்திற்கு கொண்டுவரப்பட்டது. வரும் 24ஆம் தேதி 2 நாள்கள் அரசுமுறைப் பயணமாக மனைவி மெலனியாவுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வருகிறார். அகமதாபாத் மற்றும் டெல்லிக்கு ட்ரம்ப் வருவதையடுத்து அப்பகுதிகளில் பல அடுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரமாண்ட மைதானத்தின் "கழுகுப் பார்வை" - படத்தை வெளியிட்ட பிசிசிஐ
அகமதாபாத்தில் அவரது அணிவகுப்பில் இடம் பெறும் பாதுகாப்பு வாகனம் ஒன்று அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இராணுவ பாணியில் தயாரிக்கப்பட்ட இந்த கார், எத்தகைய தாக்குதலையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் இரண்டு நாள் பயணத்தின் ஒரு பகுதியாக வல்லபாய் படேல் மைதானத்தில் மக்கள் பங்கேற்கும் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Loading More post
போராடும் விவசாயிகள் அமைதிகாக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள்
லிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா!
”சசிகலா விடுதலைக்கு பின்பும் எனது ஆட்சியே” - ஸ்டாலின் கருத்துக்கு முதல்வர் பதிலடி
சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா? – ஸ்டாலின் பதில்!
வெளியானது வாக்காளர் பட்டியல்: ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி