சேலத்தில் திருமண உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தவரிடம் ரூ.3,000 லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகளுக்கு கடந்த ஒன்றாம் தேதி திருமணம் நடைபெற்றது. அதற்கு நான்கு நட்களுக்கு முன்பு வெங்கடேசன் மகளுக்கு திருமண உதவித் தொகை கேட்டு தலைவாசல் சமூக நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அதன் பிறகு வெங்கடேசனுக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதால், அவரது உறவினர் கார்த்திக் (28) என்பவரை திருமண உதவித்தொகை சம்பந்தாமாக அனுப்பிவைத்துள்ளார்.
கார்த்திக் தலைவாசல் சமூக நலத்துறை அலுவலரை சந்தித்துள்ளார். அப்போது, சமூகநலத்துறை விரிவாக்க அலுவலர் கீதா, ரூ.3,000 லஞ்சமாக கேட்டுள்ளார். சுதாரித்துக்கொண்ட கார்த்திக் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழிகாட்டுதல்படி, சமூக நலத்துறை அலுவலரிடம் கார்த்திக் ரூ.3,000 தொகையை கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை ஏ.எஸ்.பி. சந்திரமௌலி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார், சமூக நல அலுவர் கீதாவை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடம் பல மணிநேரம் விசாரணை நடத்தியதில், அவர் லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
Loading More post
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
“30 தொகுதியில் வெற்றி, இல்லையேல் மேடையிலேயே தற்கொலை” திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேச பேச்சு
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்