ஒடிஷாவில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் நிரஞ்சன் பட்நாயக், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 300 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றியுள்ளது. இதனால் பாஜக, தனிப் பெருபான்மையுடன் ஆட்சியமைக்கிறது. காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் கோட்டை எனக் கூறப்பட்ட அமேதி தொகுதியில் பாஜகவின் ஸ்மிருதி ராணி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வீழ்த்தினார். உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் கிடைத்த படுதோல்விக்கு பொறுப்பேற்று, அம்மாநில காங்கிரஸ் தலைவரும் நடிகருமான ராஜ் பப்பார் ராஜினாமா
செய்துள்ளார்.
அதே போல ஒடிஷா காங்கிரஸ் கட்சித் தலைவர் நிரஞ்சன் பட்நாயக்கும் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ‘’ஒடிஷாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. தோல்விக் குப் பொறுப்பேற்று நான் எனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பிவிட்டேன். இளைஞர்களிடையே கட்சியை வளர்க்க, வலுவான அடிதளத்தை அமைக்க வேண்டியது அவசியம்’’ என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?