நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகளை தாண்டி மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் பல தொகுதிகளில் கனிசமான வாக்குகளை பெற்று கவனம் பெற்றுள்ளன.
இந்நிலையில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மன்சூர் அலிகான் பிரச்சாரங்களின் அதிக கவனம் பெற்றார். சாலையில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றியும், ஷூ பாலீஷ் செய்தும், மூட்டைகளை சுமந்தும், டீ ஆற்றியும், இளநீர் கடையில் இளநீர் வெட்டி குடுப்பதும், கீரை விற்றும் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் தேர்தல் முடிவுகளின்படி மன்சூர் அலிகான் 54957 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அதேபோல் தென்சென்னையில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், வெறும் 670 வாக்குகள் பெற்று பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார். கோவையை பொறுத்தவரை மார்க்சிஸ்ட், பாஜக பிரதான கட்சியாக மோதியது. இதில் மார்க்சிஸ்டை சேர்ந்த பி.ஆர். நடராஜன் வெற்றி முகத்தில் உள்ளார்.
ஆனாலும் சமீபத்தில் அரசியலில் நுழைந்த கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் கட்சியைச் சேர்ந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த டாக்டர் மகேந்திரன் அதிகம் கவனம் பெற்றுள்ளார். கோவை தொகுதியில் மகேந்திரன் 144808 வாக்குகளை பெற்றுள்ளார். வெற்றியடையவில்லை என்றாலும் குறுகிய காலத்துக்குள் கணிசமான வாக்குகளை பெற்ற மகேந்திரனுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Loading More post
தமிழகத்தில் இன்று முதல் தடுப்பூசி திருவிழா தொடக்கம்!
பெரிய அளவில் முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பில்லை - நிர்மலா சீதாராமன்
மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து: மத்திய அரசு
ட்விட்டரில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!