விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பவுர்ணமி தினத்தையொட்டி மாதம்தோறும் சதுரகிரி மலைக்குச் சென்று பக்தர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். மலைப் பகுதியில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், பக்தர்கள் செல்லும் பாதை மோசமான நிலையில் உள்ளது. இதன் வழியே செல்லும் பக்தர்கள் ஆபத்தான பல பகுதிகளை கடக்க வேண்டும் என்பதால், பாதுகாப்பு கருதி மலை ஏற தொடர்ந்து 2 ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதோஷ வழிபாட்டிற்காக பல்வேறு பகுதியில் இருந்து வந்த பக்தர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினார். இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். இதே போல் கனமழை தொடர்ந்தால், சதுரகிரி மலைக்குச் செல்ல தடை நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
ஜெயலலிதா நினைவு இல்லம் ஜன.28ல் திறப்பு - தமிழக அரசு
9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
டிராக்டர் பேரணி: ட்விட்டர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி - உளவுத்துறை
சூடு பிடிக்கும் அரசியல்களம்; அடுத்தக்கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?