வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி பகுதியில் மணல் திருட்டு தொடர்பான சோதனை மேற்கொண்ட போது 200 லிட்டர் சாராயம் சிக்கியுள்ளது.
வேலூர் மாவட்டம் சேம்பள்ளி பகுதியில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் வட்டாட்சியர் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனம் ஒன்றில் வேகமாக வந்த நபர், வட்டாட்சியரை பார்த்தவுடன் வாகனத்தை விட்டுவிட்டு தப்பிச் சென்றார். அந்த வாகனத்தை சோதித்த போது சுமார் 200, லிட்டர் கள்ளச்சாரயம் அதில் கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது. பின்னர் கள்ளச் சாராயமும், வாகனமும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
குடியாத்தம் பகுதியில் அதிக அளவில் கள்ளசாராயம் காய்சுவதும் அதனை சட்டவிரோதமாக விற்பனை செய்துவருவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காவல்துறையினர் கண்டுகொள்ளாத நிலையில் மிகவும் சுதந்திரமாக குடிசை தொழில் போல கள்ளசாராய விற்பனை நடைபெறுகிறது. இந்நிலையில் வட்டாட்சியரே கள்ளச்சாராயத்தை பிடிக்கும் அளவிற்கு நிலை மோசமாகி உள்ளதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
Loading More post
வன்முறையுடன் எங்களுக்கு தொடர்பில்லை - விவசாயிகள்
டெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் புகைப்படத் தொகுப்பு
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி