பயிற்சியாளர் கோபிசந்தின் அகாடமியில் சேர்ந்தால் மட்டும் சாம்பியன் ஆக முடியாது எனவும், கடின உழைப்பு இருந்தால் மட்டுமே சாம்பியன் பட்டத்தை பெற முடியும் என பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்து உள்ளார்.
கோவையில் தனியார் நிறுவன ஸ்போர்ட்ஸ் அகாடமி திறப்பு விழாவிற்கு வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது, நல்ல பயிற்சியாளர் கிடைத்ததால் தான், பேட்மிட்டன் விளையாட்டில் தான் வெற்றி பெற முடிந்ததாக கூறினார். மேலும் கடின உழைப்பும் பெற்றோரின் ஆதரவும் இருந்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்க முடியும் எனக் குறிப்பிட்டார். மேலும் தன்னை பத்மபூஷன் விருதுக்கு பரிந்துரை செய்ததற்கு நன்றி தெரிவித்து கொண்டார். முன்பு அதிக அளவில் கிரிக்கெட் போட்டி மட்டுமே பிரபலமாகி இருந்ததாகவும் ஆனால் தற்போது ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றதற்கு பிறகு பேட்மிட்டன் போட்டியும் பிரபலமாகி உள்ளதாகவும் இந்த விளையாட்டில் சேர பலரும் ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறினார்.
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்