ஹரியானாவில் 6 பேரை கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் பல்வால் பகுதியில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து நடைப்பெற்ற கொலை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இன்று அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை 6 நபர்கள் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் பல்வால் பகுதிகளில் பல்வேறு இடங்களில் இதுபோன்ற படுகொலை சம்பவம் பதிவாகியது காவல்துறைக்கு தெரியவந்தது. இதனையடுத்து கொலை சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் கொலையாளி குறித்த தகவல்களை சேகரித்தனர்.
இதற்கிடையில் பல்வால் பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஒரு பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து காவலர்கள் அங்கு விரைந்தனர். அங்கு இருந்த சிசிடிவி கேமரா பதிவை ஆராய்ந்த காவல்துறையினர் கொலையாளி குறித்த தகவல்களை சேகரித்தனர். அதில் நீல நிற மேல்சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்திருந்த ஒரு நபர் கையில் இரும்பு கம்பியுடன் சுற்றியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தேடுதல் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் அந்த நபரை பல்வால் பகுதியில் உள்ள ஆதர்ஷ் நகரில் வைத்து கைது செய்தனர். கைது செய்ய முற்படும் போது அந்த நபர் காவல்துறையினரையும் தாக்கியுள்ளான். கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த நபர் முதலில் ஆக்ரா மற்றும் மைனர் கேட் பகுதியில் 4 பேரை கடுமையாக தாக்கி படுகொலை செய்ததாக தெரிவித்தார். அடுத்து ஒரு செக்யூரிட்டியை கொலை செய்துள்ளான். அடுத்து பல்வால் மருத்துவமனைக்கு வந்து ஒரு பெண்ணை கொலை செய்துள்ளதாக தெரிவித்தார்.
தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்
அண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்!
திருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்
ரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா? அரசியல் வியூகத்திற்கா?
கசிந்தது ஒன் ப்ளஸ் 6! - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்?
மறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை ! சச்சினின் கிளாஸான இன்னிங்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்