ரம்ஜான் நோன்பு ஒரு தொற்றுநோய் என குஜராத் இந்தி பாடப்புத்தகத்தில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரம்ஜான் மாதத்தில் கடைபிடிக்கப்படும் நோன்பு சிறப்புமிக்கதாகவும், புனிதமாகவும் இஸ்லாமியர்களால் கருதப்படுகிறது. இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் 4ம் வகுப்பு இந்தி பாடப்புத்தகத்தின் 13வது பக்கத்தில் இத்கா எனும் கதையில், இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்படும் நோன்பு, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும் தொற்றுநோய் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது அச்சடிக்கும்போது ஏற்பட்ட பிழை என்று அம்மாநில பாடப்புத்தக வாரியத்தின் தலைவர் நிதின் பெத்தானி விளக்கம் அளித்துள்ளார். இதற்கு முன்பும் இதேபோல் 9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ஏசுவை அருவருப்பான வார்த்தைகளால் குறிப்பிடப்பட்டு, பின்னர் திருத்தப்பட்ட சம்பவமும் நடந்துள்ளதாகவும் இவ்விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மதங்கள் மற்றும் மக்களின் நம்பிக்கையுள்ள விஷயங்கள் குறித்து அரசு சார்பாக வெளியிடும் கருத்துகளில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், இஸ்லாமியர்களின் புனித நோம்பு குறித்து தவறான கருத்தை வெளியிட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Loading More post
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
``பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்தனும், ஆதார் கொடுக்கனும்"-உச்சநீதிமன்றம் உத்தரவு
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்