சென்னையில் சந்தேகத்தால் மனைவியை கொலை செய்த கணவர், தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.
நுங்கம்பாக்கம், காமராஜபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்துவருகிறார். குடிப்பழக்கம் உள்ள சீனிவாசனுக்கும், அவரது மனைவி லட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வீட்டுச்செலவுக்குக்கூட கணவர் பணம் தராத நிலையில், லட்சுமி வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். 3 மாதங்களுக்கு முன் சண்டை முற்றிய நிலையில், மகள் வீட்டுக்கு லட்சுமி சென்றுவிட்டார். இந்நிலையில், வீட்டு வேலைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்த லட்சுமியை பின்தொடர்ந்து வந்த சீனிவாசன், மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு தானும் கத்தியால் குத்திக்கொண்டு சரிந்தார். தகவல் கிடைத்து வந்த நுங்கம்பாக்கம் போலீசார், லட்சுமியின் உடலையும், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சீனிவாசனையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்