ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக 19 வயதான சிரிய அகதியான முசூன் அல்மெல்லீஹன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை யுனிசெஃப்பின் துணை நிர்வாக இயக்குனர் ஜஸ்டின் ஃபார்ஸித் வெளியிட்டார். அகதியான ஒருவர் யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் அவர் கூறினார். உள்நாட்டுப் போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவைச் சேர்ந்த முசூன், ஜோர்டான் நாட்டிலுள்ள ஜாட்டாரி அகதிகள் முகாமில் வசித்து வருகிறார். பெண் குழந்தைகளின் கல்விக்காக தொடர்ந்து குரல்கொடுத்து வரும் முசூன், தனது சொந்தநாடான சிரியாவில் இருந்து வெளியேறியபோது, புத்தகத்தை மட்டுமே எடுத்து வந்ததாக நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். அகதிகளாக சொந்த நாட்டை விட்டு வெளியேறும் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்துவைக்கப்படும் போது, அவர்கள் படும்பாட்டினை தான் நேரடியாக பார்த்து உணர்ந்துள்ளதாகக் கூறும் அவர், பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக யுனிசெஃப்ஃபுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கும் எனக் கூறுகிறார். யுனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக இருந்த மறைந்த நடிகை ஆட்ரே ஹெப்பர்னினைப் பின்பற்றி, தனது பணியைத் தொடரப் போவதாகவும் அவர் கூறினார்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்