Published : 04,May 2020 02:42 AM

”கொரோனா காலத்திலும் முதலமைச்சர் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார்”-மு.க.ஸ்டாலின்

Value-added-tax-on-petrol-and-diesel-Mk-Stalin-condemns-crackdown

பெட்ரோல் மீதான தமிழக அரசின் மதிப்புக் கூட்டு வரி உயர்வுக்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 266 ஆக உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 203 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

image

வியாபாரிக்கு கொரோனா தொற்று - திருவான்மியூர் சந்தை வேறு பகுதிக்கு மாற்றம்

இதனிடையே பொருளாதாரமும் கடுமையான சரிவை சந்தித்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியையும் தமிழக அரசு அதிகரித்துள்ளது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸிடாலின் கண்டனம் தெரிவித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்

இன்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகள்: எவை இயங்கலாம் ? எவை இயங்காது?

அதில் “ கொரோனா காலத்திலும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன்னால் முடிந்தளவு மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்திலும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை தமிழ்நாடு அரசு உயர்த்தியிருப்பது சரியா? முறையா? நியாயமா? இதனால் தமிழக அரசின் மதிப்புதான் குறையும்; விலைவாசி உயரும்; மக்களின் கவலைகள் கூடும்! எனவே வரி உயர்வை திரும்பப் பெற்று, மக்களுக்கு உதவியாக இருக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்!” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்