மதுரையில் கொரோனா காய்ச்சல் என அஞ்சி மூலிகை மருந்து சாப்பிட்ட குடும்பம் பரிதாப நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள குன்னுத்துப்பட்டியைச் சேர்ந்த தம்பதியினர் முத்துக்கருப்பன் - கவிதா. இவர்களின் மகன் திராவிட செல்வம் என்பவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவி வருவதால் அதன் தாக்கத்தால் காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் என எண்ணிய முத்துக்கருப்பன், வீட்டில் இருந்த மூலிகை மருந்தை திராவிட செல்வத்திற்கு கொடுத்ததாக தெரிகிறது.
மேலும் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் காய்ச்சல் பரவக்கூடாது என எண்ணி மனைவி கவிதா, மகன்கள் பெரியார் செல்வம் மற்றும் விஷ்வா ஆகியோரையும் மூலிகை மருந்தை உட்கொள்ள செய்துள்ளார். மூலிகை மருந்தை உட்கொண்ட நான்கு பேருக்கும் சிறிது நேரத்திலேயே வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது, இதில் பதற்றமடைந்த முத்துக்கருப்பன், நான்கு பேரையும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலென்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் பயத்தால் போதிய விழிப்புணர்வு இன்றி முத்துக்கருப்பன் மேற்கொண்ட செயலில் தற்போது அவர் குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது. இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என மருத்துவர்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Loading More post
`கணவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை’ - கேரளா விஸ்மயா வழக்கின் தீர்ப்பு விவரம்
'இந்த ஐபிஎல் சீசனின் சிறந்த கேப்டன் இவர்தான்..' - சேவாக் புகழும் அந்த வீரர் யார்?
`கோயில் திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது' - நீதிமன்றம் காட்டம்
'தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தல்' - சந்திரபாபு நாயுடு கடிதம்
’திமுகவும், காங்கிரஸும் விமர்சித்துக் கொள்வது புதிதல்ல’ - திருநாவுக்கரசர் எம்.பி
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்