கொரோனா வைரஸ் எதிரொலியால் பிரதமர் நரேந்திர மோடியின் ஐரோப்பிய யூனியன் சுற்றுப்பயண அட்டவணை மாற்றப்பட்டிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று 30 ஆக அதிகரிப்பு
பெல்ஜியத்தின் புருசல்ஸ் நகரில் நடைபெறும் இந்தியா - ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கிடையேயான உச்ச மாநாட்டில் மோடி பங்கேற்பதாக இருந்ததது. ஆனால் இந்தியாவிலும் பெல்ஜியத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் இந்த சூழலில் மாநாட்டை வேறு தேதிக்கு நடத்த இரு நாடுகளின் தரப்பில் பரஸ்பர முடிவு எட்டப்பட்டிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியால் விமானத்துறையில் எட்டு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. வழக்கமாக கிடைக்கும் வருவாயை விட 19 சதவிகிதம் குறைவாகவே கிடைத்திருப்பதாக சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சம்: கைவிடப்பட்டதா ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு?
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் விளக்கம் அளித்துள்ளார்.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!