ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்காமல் விட்டால் அதனை மூடியிருக்க தான் வேண்டும் என்று விமான போக்குவரத்துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்க திட்டமிட்டு வந்தது. இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் கருத்து தெரிவித்து வந்தார். அத்துடன் மத்திய அரசின் அமைச்சரவையும் இந்தக் கொள்கை முடிவிற்கு ஒப்புதல் அளித்தது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஏர் இந்தியா தனியார் வசம் சென்றுவிடும் என்ற தகவல் வெளியானது.
இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்க அரசு திட்டமிட்டது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தக் கேள்விக்கு விமான போக்குவரத்துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதிலளித்துள்ளார். அதில், “ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்காவிட்டால், அதனை மூடியிருக்க தான் வேண்டும். ஏனென்றால் இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு இந்தியா மற்றும் வெளிநாடுகள் உள்ளிட்டவற்றில் தரையிறங்கும் அனுமதி இருந்த போதும் இதன் நஷ்டம் தான் அரசை விற்கும் முடிவை எடுக்க வைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?