பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி அளிக்கும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி கண்காணிப்புக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி செல்வதை தடுக்கும் நடவடிக்கைகளை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் பின்பற்றாவிட்டால் பாகிஸ்தான் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படும் என சர்வதேச நிதி கண்காணிப்புக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாரிசை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிதி கண்காணிப்புக் குழு, வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி செல்வதை தடுப்பதில் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டிருந்ததாகவும், அந்த உடன்படிக்கையின்படி வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நடவடிக்கைகளை துரிதப்படுத்த தவறினால் பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் இணைப்பது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஜனவரி மற்றும் மே மாதங்களில் இரு முறை பாகிஸ்தான் இந்த இலக்கை தவறிவிட்ட நிலையில் இறுதியாக செப்டம்பர் மாதத்திற்குள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நிதி கண்காணிப்புக் குழு இறுதி கெடு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்