தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 3 மாத காலம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்திருந்த பொதுநல வழக்கில், தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடுமாறு கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மறு வரையறை நடந்து வருவதாகவும், இந்தப் பணி நிறைவடைந்து தொகுதி மறுவரையறை குறித்த அறிவிப்பாணை அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னரே உள்ளாட்சித் தேர்தல் நடத்த வாய்ப்பிருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது, உள்ளாட்சித் தேர்தல் நடத்துவற்கான தேதியை அறிவிக்க வேண்டுமென நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர். வழக்கு மீண்டும் நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த மேலும் 3 மாத கால அவகாசம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Loading More post
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
``பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்தனும், ஆதார் கொடுக்கனும்"-உச்சநீதிமன்றம் உத்தரவு
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்