தமிழகத்தில் அம்மா உணவகம் போல உத்தரபிரதேசத்தில் அன்னபூர்ணா போஜனாலயா திட்டம் விரைவில் துவக்கபப்ட இருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற பின், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அதில் ஒன்றாக, ஏழைகளுக்காக மலிவு விலை உணவு விடுதிகளை திறக்க இருக்கிறார். இதற்கு அன்னபூர்ணா போஜனாலயா என்று பெயரிட்டுள்ளனர். இதில் காலை உணவு 3 ரூபாய்க்கு கிடைக்கும். இதில் இட்லி, சாம்பார், போஹா, பகோடா, டீ ஆகியவை உண்டு.
மதிய உணவு 5 ரூபாய். இதில் சாப்பாடு, சப்பாத்தி, பருப்பு, காய்கறிகள் இருக்கும். இரவு உணவும் காலை டிபனை போன்றதே. ஒரு நாள் உணவுக்கு 13 ரூபாய் இருந்தால் போதும். இதற்காக முதலிலேயே பணம் செலுத்தி டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். ஏழைகள் மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
‘இந்தத் திட்டத்தின் முழு வடிவமும் ரெடியாகிவிட்டது. வரும் 12-ம் தேதி முதல்வரிடம் விளக்க இருக்கிறோம். முதல் கட்டமாக 14 மாநகராட்சிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டு, பின்னர் விரிவுப்படுத்தப்படும்’ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!