சென்னையில் தொழில் போட்டி காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தி கொலை செய்யப்பட்டார்.
சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் கலியமூர்த்தி. கடந்த 16ம் தேதி நண்பர்களுடன் காரில் சென்ற கலியமூர்த்தி, அதன் பிறகு வீடு திரும்பவில்லை என்று அவரது மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக கலியமூர்த்தியின் நண்பர்களான சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த செந்தில் மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முருகவேலிடம் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. தொழில் ரீதியாக கடந்த 16-ம் தேதி கலியமூர்த்தியை அவரது நண்பர்களான செந்தில் மற்றும் முருகவேல் உட்பட 6 பேர், காஞ்சிபுரம் அழைத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொழில் போட்டி காரணமாக கலியமூர்த்தியை அடித்துக் கொன்ற 6 பேரும், அவரது உடலை காஞ்சிபுரம் அருகே வீசி சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் செந்தில் மற்றும் முருகவேலை கைது செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!