ராஜஸ்தானில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய, ஆய்வாளர் முனிசேகர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொளத்தூர் காவல்நிலையத்தில் ஆய்வாளராக இருந்த முனிசேகரை தென்மண்டல காவல்துறைக்கு மாற்றி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொளத்தூர் நகைக் கடை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்வதற்காக பெரியபாண்டியன் தலைமையிலான காவல்துறையினர் ராஜஸ்தான் சென்றிருந்தனர். கடந்த டிசம்பர் 13ஆம் தேதி கொள்ளையர்களுடன் நடந்த மோதலில் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதற்கிடையே, பெரியபாண்டியனின் உடலில் பாய்ந்தக் குண்டு, சக ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்டது எனத் தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஆய்வாளர் முனிசேகர் தென்மண்டல காவல்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்