கர்நாடக மாநிலம் பெங்களூரு கிழக்குப் பகுதியில் பறவைக் காய்ச்சல் நோய் பரவியுள்ளது. இதையடுத்து அங்கு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தசரஹலி பகுதியில் இருக்கும் சில கோழிப்பண்ணைகளில் ஏராளமான கோழிகள் செத்து மடிந்ததால் அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து கோழிகள் எடுத்துச் செல்லப்பட்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருக்கும் கால்நடை நோய் தடுப்பு தேசிய உயர் பாதுகாப்பு மையத்தில் வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அவை பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கர்நாடக மாநில அரசுக்கும் தெரிவிக்கப்பட்டது. நிலைமைக் கட்டுக்குள் இருப்பதாக கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோழிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. அந்த பகுதியில் இருந்து 10 கிமீ சுற்றளவில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. தனியார் மருத்துவர்கள், கிராம பஞ்சாத்து உறுப்பினர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாகவும் கர்நாடக மாநில அரசு கூறியுள்ளது,.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'