தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் வரும் ஜனவரி மாதம் தொடங்கப்படும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி அதற்கான அறிவிப்பை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெற்றார். அதன்படி கடந்த 2014ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து செங்கல்பட்டு, பெருந்துறை, தஞ்சாவூர், மதுரை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, 4 பேர் கொண்ட மத்திய குழுவினர் அங்கு ஆய்வு செய்தனர். இறுதியாக தஞ்சையா அல்லது மதுரையா என்ற போட்டி ஏற்பட்டு, இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் வரும் ஜனவரி மாதம் தொடங்கப்படும் என கடம்பூர் ராஜூ தெரிவித்தார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் இரத்த பரிசோதனை ஆய்வு மைய நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பேசிய அவர் இவ்வாறு கூறினார். தமிழகத்தில் எய்ம்ஸ் அமைப்பதற்கு தேவையான அனுமதி மத்திய அரசிடமிருந்து கிடைத்துவிட்டதாகவும் கூறினார். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
Loading More post
’காவல் நிலையத்தில் சித்ரவதை செய்ததால் என் மகன் தற்கொலை’ - நீதிமன்றத்தை நாடிய தாய்!
கிழிக்கப்பட்ட சட்டை.. ரத்த காயம்.. திமுக நிர்வாகி மீது தாக்குதல் - குன்றத்தூரில் பரபரப்பு
கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் - தமிழ் நடிகர், நடிகைகளில் இவர்கள் தான் டாப்!
காசிமேடு: கடலுக்குள் கவிழ்ந்த படகு.. நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்.. நடந்தது என்ன?
‘2012ல் ஷாரூக்கானிடம் இதற்காகத்தான் ஐபிஎல் வாய்ப்பை நிராகரித்தேன்’- ம.பி கோச் சந்திரகாந்த்
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix