Published : 09,Nov 2017 01:11 PM
இந்தியா - வங்கதேசம் இடையே ரயில்சேவை: கொடியசைத்து தொடங்கி வைத்தார் மோடி

இந்தியாவிலிருந்து வங்கதேசத்துக்கு ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பந்தன் எக்ஸ்பிரஸ் என்றழைக்கப்படும் கொல்கத்தா- குல்னா எக்ஸ்பிரஸ் இந்தியாவின் மேற்கு வங்கத்தில் இருந்து வங்கதேசத்தின் குல்னா வரை பயணிப்பதற்காக இன்று தொடங்கப்பட்டது. இந்த இரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த தொடக்க விழாவில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். மேலும் புதிதாக இயக்கப்படும் ரயில் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் எனவும் மோடி தெரிவித்தார்.