இரட்டை இலை சின்னம் வழக்கு தொடர்பாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருக்கு உதவியதாக இரண்டு காலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு மட்டுமல்லாமல் சுகேஷ் மீது மும்பை, டெல்லி, கோவை ஆகிய பகுதிகளில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் மோசடி வழக்கு தொடர்பாக சுகேஷை கோவைக்கு அழைத்து செல்லும்போது, பெங்களூர் வழியாக சென்றுள்ளனர். அப்போது குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே பெங்களூருவை அடைந்துவிட்டதால், அங்கு சுகேஷ் காவல்துறையின் பாதுகாப்பு இல்லாமல் சுற்றித்திரிந்து, சொகுசுக்கார் வாங்கியதாகவும், சிலரிடம் பணம் பெற்றதாகவும் வருமான வரித்துறையினர் புகார் அளித்தனர்.
இதனையடுத்து சுகேஷூடன் பாதுகாப்புக்கு சென்ற ஏழு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது டெல்லி மாநகர காவல் ஆணையரின் உத்தரவின்படி இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide