பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறுமா அல்லது நேரடியாக நடைபெறுமா என மாணவர்களிடையே கேள்வி எழுந்திருந்தது. இது தொடர்பாக, உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை புதிய தலைமுறை சார்பாக தொடர்புக்கொண்டு பேசினோம். அப்போது, ஏற்கெனவே அறிவித்தபடி ஆன்லைன் வழியே தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பின்போது உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், “செய்முறைத் தேர்வுகள் இருக்கும் என்பதால்தான் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. ஆன்லைன் தேர்வு இல்லாத நாட்களில் மாணவர்கள் கல்லூரிகளுக்கு வர வேண்டும். கல்லூரிகள் பிப்.1ல் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் முறையிலேயே 1, 3, 5ஆவது செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும். எனவே யாரும் குழப்பமடைய வேண்டாம்” எனத் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் நடந்த குடியரசு தின விழாவில் ஆளுநரின் மும்மொழிக் கல்வி கொள்கை குறித்து தனது கருத்துகளை பகிர்ந்த அவர், “தமிழகத்தில் கண்டிப்பாக இருமொழிக் கொள்கைதான் தொடரும். அதில் தமிழக அரசும், முதல்வரும் உறுதியாக இருக்கின்றனர். முதல்வர் சொன்னதுபோல, எங்களுக்கு விருப்ப மொழியாக பிறமொழி கற்பதில் எவ்வித பிரச்னையும் இல்லை. ஆனால் கட்டாயத்தின்பேரில் அதை படிக்க முடியாது” என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுதியாக தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி: தமிழகத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு ரத்து; அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் அனுமதி
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!