பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை ரத்து செய்யப்பட்டிருப்பதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 12-ம் தேதி நடக்கும் தேசிய இளைஞர் தின விழாவில் பிரதமர் மோடி நேரில் கலந்துக்கொள்ள இருந்த நிலையில், தற்போது அது தடைபட்டுள்ளது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக இந்த தடை நடந்திருப்பதாக தெரிகிறது. நேரில் வரவில்லை என்றாலும், மோடி காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வார் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்புகளைத் தொடர்ந்து, புதுச்சேரிக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பு பற்றிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், “புதுச்சேரியில் பொங்கல் நிகழ்வையொட்டி, ரூ.490 மதிப்புள்ள 10 பொருட்களுடன் ரேசன் அட்டைக்காரர்களுக்கு பரிசுத்தொகுப்பு தரப்படும்” என்று அவர் கூறியுள்ளார். இவற்றுடன், புதுவையில் தற்போதுவரை ஆளுநருடன் இணைந்த நிலையே நீடிப்பதாகவும், தங்களுக்குள் எவ்வித முரணும் இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.
இதேபோல பிரதமர் பங்கேற்க இருந்த மதுரை ‘மோடி பொங்கல்’ நிகழ்ச்சியும் அதை ஒருங்கிணைத்த தமிழக பாஜக-வால் நேற்றைய தினம் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுதொடர்பான தனது அறிவிப்பில், கொரோனா அச்சம் காரணமாகவே இந்தத் தடை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி: ”மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த ‘பொங்கல்’ நிகழ்ச்சி ரத்து”- அண்ணாமலை அறிவிப்பு
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்