பெகாசஸ் உளவு விவகாரத்தை விசாரிக்க குழு அமைத்துள்ள உச்ச நீதிமன்றம், அந்தச் சிறப்பு வல்லுநர் குழு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான விதிமுறைகளையும் வகுத்துள்ளது. அது குறித்த விவரம் இதோ...
இந்திய குடிமக்களின் அலைபேசிகளில் அல்லது பிற தொழில்நுட்ப சாதனங்களின் சேமிக்கப்பட்ட தரவுகளை எடுக்கவும், உரையாடல்களை ஒட்டுக் கேட்கவும், அவர்கள் தொடர்பான தரவுகளை டவுன்லோடு செய்யவும் இந்த பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா என்பதை ஆராய்வதே இந்தக் குழுவின் முக்கியப் பணி.
இத்தகைய உளவு தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்த தகவல்கள் திரட்டப்பட வேண்டும்.
கடந்த 2019-ஆம் ஆண்டில் இத்தகைய உளவு தாக்குதல் நடந்ததாக செய்திகள் வெளியாகி இருக்கக்கூடிய நிலையில், இதைத் தடுக்க அல்லது கண்காணிக்க மத்திய அரசு என்ன மாதிரியான நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பது சம்பந்தமான விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும்.
இந்திய அரசு இந்த பெகாசஸ் மென்பொருள் மூலமாக இந்தியக் குடிமக்களை உளவு பார்த்ததா? அப்படி உளவுபார்த்தது என்றால் எந்தச் சட்டத்தின் கீழ், எந்த விதிமுறைகளின் கீழ் இத்தகைய செயல்கள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்த விவரங்கள் வழங்கப்பட வேண்டும்.
இந்திய நாட்டின் குடிமக்கள் மீது ஏதேனும் ஓர் உள்நாட்டு நிறுவனம் இத்தகைய உளவுத் தாக்குதலை செய்திருந்தால், அது அங்கீகரிக்கப்பட்டதா என்பதையும் இந்தக் குழு ஆராய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் குழு பரிந்துரைகளை வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது அதன்படி, எழுந்துள்ள உளவுத் தாக்குதல் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், தற்பொழுது உள்ள சட்டம் மற்றும் கண்காணிப்பை மேம்படுத்துவதற்கான மற்றும் தனி உரிமையை பாதுகாப்பதற்கான புதிய சட்டம் அல்லது சட்டத் திருத்தங்களை செய்வதற்கான அறிவுறுத்தல்களை வழங்கலாம்.
சட்டவிரோதமாக இந்திய குடிமக்களை உளவு பார்க்கும் செயல்முறையை தவிர்க்கும் வகையிலான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவது சம்பந்தமான அறிவுறுத்தல்களை வழங்கலாம்.
இணையவழி தாக்குதல்களாலான சைபர் அட்டாக்குகளை கட்டுப்படுத்துவதற்கான முழு தொழில்நுட்பமும் அடங்கிய தனிப்பட்ட அதிகாரங்கள் கொண்ட அமைப்பை உருவாக்குவது தொடர்பாகவும் யோசனைகளை முன்வைக்கலாம்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வேறு எந்த ஒரு யோசனையையும் கருத்துகளையும் அறிவுறுத்தல்களையும் இந்த குழு வழங்கலாம் எனவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திக் கட்டுரைகள்:
> பெகாசஸ் உளவு விவகாரம்: விசாரணைக் குழுவை அமைத்ததுடன் 'வெளுத்து வாங்கிய' உச்ச நீதிமன்றம்
> அனுபவமும் நிபுணத்துவமும்: பெகாசஸ் உளவு விவகாரத்தை விசாரிக்கும் குழுவின் பின்புலம் என்ன?
Loading More post
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி! அதிர்ந்துபோன வாடிக்கையாளர்!
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!