சென்னை ராயப்பேட்டை அருகே ஓடும் கார் தீப்பிடித்து எரிந்தது. 2 பேர் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினர்.
சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்றில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சியடைந்த காரை ஓட்டி வந்தவரும், உடன் வந்தவரும் காரில் இருந்து கீழே இறங்கினர். இதையடுத்து காரின் முன்பகுதி தீபிடித்து எரிந்தது.
இந்நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக ராயப்பேட்டை மேம்பாலத்தின் ஒரு பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து அண்ணாசாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் ராயப்பேட்டையைச் சேர்ந்த முகமது ரபீக் என்பதும், பழைய காரை கடந்த சில மாதங்களுக்கு முன்தான் விலைக்கு வாங்கியதும் தெரியவந்தது. கடந்த சில மாதங்களாக ஓடும் காரில் தீ விபத்து ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!