ராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் மணிமண்டபத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் காலை 10.15 மணிக்கு மதுரை வந்தார். அங்கு அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி, காலை 11.30 மணிக்கு அப்துல்கலாமின் மணி மண்டபத்தை திறந்து வைத்தார். இதன்பின் கலாமிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிரதமர், மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள கலாமின் சிலைகளையும் புகைப்படங்களையும் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து கலாமின் குடும்பத்தினரை சந்தித்து பிரதமர் மோடி உரையாடினார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். பிறகு கலாமின் வாழ்க்கையை விளக்கும் அப்துல் கலாம் 2020 என்ற கண்காட்சி ஊர்தி பயணத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த பேருந்து ராமேஸ்வரத்தில் இருந்து பல்வேறு ஊர்களின் வழியாக அப்துல் கலாமின் பிறந்த நாள் அன்று டெல்லி சென்றடைகிறது.
இதனிடையே, அப்துல் கலாமின் நினைவு மண்டபத்தை பார்வையிட பொதுமக்களுக்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
’காவல் நிலையத்தில் சித்ரவதை செய்ததால் என் மகன் தற்கொலை’ - நீதிமன்றத்தை நாடிய தாய்!
கிழிக்கப்பட்ட சட்டை.. ரத்த காயம்.. திமுக நிர்வாகி மீது தாக்குதல் - குன்றத்தூரில் பரபரப்பு
கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் - தமிழ் நடிகர், நடிகைகளில் இவர்கள் தான் டாப்!
காசிமேடு: கடலுக்குள் கவிழ்ந்த படகு.. நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்.. நடந்தது என்ன?
‘2012ல் ஷாரூக்கானிடம் இதற்காகத்தான் ஐபிஎல் வாய்ப்பை நிராகரித்தேன்’- ம.பி கோச் சந்திரகாந்த்
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix