மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு எட்டரை ரூபாய் வரை குறைக்க வழி இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ள நிலையில் அதை குறைக்க பல்வேறு தரப்பிலிருந்தும் அரசுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கலால் வரி குறைப்பு மூலம் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போதைய நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாய் 50 காசு வரை அரசுக்கு வருவாய் இழப்பின்றி குறைக்க முடியும் என ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கலால் வரி குறைப்பை மேற்கொள்வதால் வரும் நிதியாண்டுக்கான வருவாய் இலக்கை நிர்ணயித்த இலக்கிற்குள் வைத்திருக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் வரி குறைப்பால் மக்களுக்கு நன்மை கிடைப்பதுடன் பொருளாதாரத்தில் சாதகமான விளைவுகளும் ஏற்படும் என ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் பெட்ரோல் மீது லிட்டருக்கு 31 ரூபாய் 80 காசும் டீசல் மீது லிட்டருக்கு 32 ரூபாய் 90 காசும் கலால் வரி விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!