புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில் அங்கு ஆட்சி கவிழ்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகியுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து தனது பதவியை ராஜினாமா செய்து துணை நிலை ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார். சிவக்கொழுந்தின் மகன், சகோதரர் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்த அடுத்த சில நிமிடங்களில் அவர் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் நாராயணசாமி அரசு நம்பிக்கை வாக்கு கோரியபோது நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க கூடாது என காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது சபாநாயகர் சிவக்கொழுந்து அதை ஏற்க மறுத்து, அரசு பெரும்பான்மை இழந்ததாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
விவேக்கின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
விவேக்கின் இதயம் பலவீனமாக இருந்ததால் சிகிச்சை பலனளிக்கவில்லை - சிம்ஸ் மருத்துவமனை விளக்கம்
வேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் விறுவிறுப்பான மறு வாக்குப்பதிவு!
மேற்கு வங்கம் : தொடங்கியது 5ஆம் கட்ட வாக்குப்பதிவு
5 முறை சிறந்த காமெடியன்; 3 முறை பிலிம்ஃபேர் : நகைச்சுவையில் முத்திரை பதித்த விவேக்!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்