கொரோனா பெருந்தொற்று வராமல் இருந்திருந்தால் மகேந்திர சிங் தோனி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் நிச்சயம் இந்தியாவுக்காக விளையாடி இருப்பார் என தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தேர்வுக் குழு உறுப்பினர் சரன்தீப் சிங்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி கடந்த 2020 ஆகஸ்ட் 15 அன்று தனது ஓய்வு முடிவை அறிவித்தார். தற்போது தோனி ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார்.
“நிச்சயமாக தோனி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாடி இருப்பார். கொரோனா அனைத்தையும் மடைமாற்றி விட்டது. அவர் மிகவும் ஃபிட்டான ஒரு வீரர். ஒரு போதும் பயிற்சிக்கு அவர் முழுக்கு போட்டதில்லை. அனைத்து நாளும் மும்முரமாக பயிற்சி செய்பவர் அவர். காயம் காரணமாக அவர் எந்தவொரு போட்டியிலிருந்தும் விலகியதில்லை என்பதே அதற்கு சான்று.
‘ரொம்ப அதிகமாக யோசிக்க வேண்டாம். சூழ்நிலையை புரிந்து கொண்டாலே அதற்கேற்றபடி முடிவுகளை எடுக்கலாம்’ என்பதுதான் வளர்ந்து வரும் வீரர்களுக்கு தோனி கொடுக்கும் அட்வைஸ். அவர் டி20 உலகக்கோப்பை விளையாடி இருக்க வேண்டும். அது தான் இப்போதுள்ள தேர்வுக் குழு உறுப்பினர்களின் விருப்பமும் கூட” என அவர் தெரிவித்துள்ளார்.
வரும் ஏப்ரல் - மே வாக்கில் ஆரம்பமாக உள்ள ஐபிஎல் தொடரில் தோனி ஆக்ஷனுக்கு திரும்ப உள்ளார்.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?