சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா - ரஹானே ஜோடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். இதனால் தேநீர் இடைவேளை வரை 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது இந்தியா.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் மிகவும் எதிர்பார்ப்புடன் 2ஆவது போட்டி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்ந்தெடுத்தார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் டக் அவுட்டானார்.
இதனையடுத்து ரோகித்துடன் இணைந்து புஜாரா ஜோடி அற்புதமாக விளையாடியது. இந்த ஜோடி அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்தது. களத்தில் தொடர்ந்து நின்று சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 21 ரன்களில் ஜாக் லீச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால் யார் அவுட்டானால் என்ன என பிரமாதமாக விளையாடிய ரோகித் அரை சதம் கடந்தார். இதனிடையே கேப்டன் விராட் கோலி மொயின் அலி பந்துவீச்சில் டக்அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
இந்திய அணி உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 80 ரன்களுடனும், ரஹானே 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர். உணவு இடைவேளைக்கு பின்பு ஆட வந்த இருவரும் அட்டகாசமான பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார்கள். இதில் பல கிளாசான ஷாட்டுகளை ரஹானே விளையாடினார். தொடர்ந்து சீரான வேகத்தில் ரன்களைச் சேர்த்த ரோகித் சர்மா சதமடித்தார். இதே போல ரஹானேவும் சிறப்பாக விளையாடினார்.
இந்த இரு பேட்ஸ்மேன்களால் இந்தியா தேநீர் இடைவேளை வரை 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை எடுத்துள்ளது. இதில் ரோகித் சர்மா 132 ரன்களுடனும், ரஹானே 36 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள்.
Loading More post
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
60 வயதை கடந்த 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்குத் தண்டனை... பஞ்சாப் அரசு முடிவு
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?