மதுரையில் பழைய இரும்புக் பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.
மதுரை கோமதிபுரம் அல்லி வீதி பகுதியை சேர்ந்தவர் சன்னாசி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அதே பகுதியில் பழைய பொருட்களை வாங்கி மொத்தமாக விற்பனை செய்யும் குடோன் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென குடோனில் இருந்து புகை வருவதாக அக்கம்பக்கத்தினர் தல்லாகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர், அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இருப்பினும் தீ வேகமாக பரவியதால் தல்லாகுளம், அனுப்பானடி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஐந்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் பல மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Loading More post
குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முக்கியச் செய்திகள்: அச்சுறுத்தும் கொரோனா 2-ம் அலை முதல் சென்னை அணியின் வெற்றி வரை
தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்