மும்பையில் கோரேகான் பகுதியில் உள்ள திரைப்பட ஸ்டூடியோவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
கொரோனா கட்டுப்பாடுகளின் தளர்வுகளுக்கு பிறகு மும்பை கோரேகான் பகுதியில் உள்ள திரைப்பட ஸ்டூடியோவில் திரைப்படம் மற்றும் சீரியல்களுக்கான படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு தளத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரக்கட்டை பகுதியில் திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
தீ அடுத்தடுத்த பகுதிகளுக்கு தொடர்ந்து பரவிவருவதால், அங்கு அமைக்கப்பட்டிருந்த அடுக்குமாடி கட்டடங்கள் போன்ற செட்களிலும் தீ பரவியுள்ளது. மேலும் ஸ்டூடியோக்களை மூட, பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை ஒரு இடத்தில் குவித்து வைத்திருக்கின்றனர். அந்த இடத்திலும் தீ தொடர்ந்து பரவி வருவதால் விண்ணை முட்டும் அளவுக்கு புகை எழுந்துள்ளது.
தீயை அணைக்க 8க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் போராடிவருகின்றன. காவல்துறை சார்பாக இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அருகில் குடியிருப்புகள் இருப்பதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
#Mumbai #AjayDevgn pic.twitter.com/AVVX7Yh2YA
Loading More post
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை!
மீண்டும் ஈ.வெ.ரா சாலையான கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு - நள்ளிரவில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கோடை மழை!
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!