கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அதிமுக முன்னாள் அமைச்சர் தாமோதரன்(76) சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பா.வெ தாமோதரன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் கால்நடைத்துறை அமைச்சராக இருந்தவர். மாநில எம்.ஜி.ஆர் மன்றத் துணைத்தலைவராகவும், ஆவின் தலைவராகவும், அதிமுக அமைப்பு செயலாளராகவும் பல்வேறு பதவிகளை வகித்தவர். இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா அனைத்து தரப்பினரையும் பாதித்து வருகிறது.
ஏற்கனவே, கொரோனாவால் திமுக எம்.எல்.ஏ ஜெ அன்பழகன் உயிரிழந்தார். இந்நிலையில்,கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி முதல் கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பா.வெ தாமோதரன், அதிகமான நுரையீரல் பாதிப்பால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார். நாளை அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு