ரோகித் சர்மா மீண்டும் விளையாட வரும்போது அவர் மீது அழுத்தம் இருக்கும் என்று டெல்லி கேப்பிடல்ஸ் தொடக்க வீரர் ஷிகர் தவன் தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கடந்த சில போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக ஆஸ்திரேலியா செல்ல இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியிலும் அவர் இடம்பெறவில்லை. அவருக்கு 6 வாரம் ஓய்வு வேண்டும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் களமிறங்கினார். இது கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் ஷிகர் தவன் பேசும்போது "ரோகித் ஒரு மிகச்சிறந்த வீரர். ஆனால் இடையே சில போட்டிகளில் அவர் விளையாடவில்லை. அதனால் அவர் பார்மில் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாது. அவர் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்துவிட்டார் என நினைக்கிறேன். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். ஒரு எதிரணியாக ரோகித்தின் பார்ம் எப்படி இருக்கிறது என பார்க்க வேண்டும்" என்றார்.
மேலும் "காயத்திலிருந்து ஒரு வீரர் மீண்டு வந்து விளையாடுவது சாதாரண விஷயமில்லை. அவர் மீது ஏகப்பட்ட அழுத்தம் இருக்கும். அதனை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நாங்கள் பார்ப்போம். நாளையப் போட்டியில் மும்பைக்கு எதிராக சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பெற வைக்கும் எண்ணமே இப்போது எனக்கு இருக்கிறது" என்றார் ஷிகர் தவன்.
Loading More post
”ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை!”-கமல்ஹாசன் குற்றச்சாட்டு
மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் வாயுக்கசிவு: உயிரிழப்பு 22 ஆக அதிகரிப்பு
"மூன்றாவது குழந்தையை பெறுபவர்களுக்கு சிறைத் தண்டனை தர வேண்டும்"-கங்கனா ரனாவத்
தடுப்பூசிக்கும் உணவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை - கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர்
கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை இருமடங்கு அதிகரிப்பு
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்