பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது இந்த மாதம் முதல் கட்டாயம் என வருமான வரிச் சட்டம் கூறுகின்றது. இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு விவகாரத்தில் யாருக்கெல்லாம் விலக்கு என்ற பட்டியல் வெளியிடபட்டுள்ளது.
மத்திய அரசின் அறிவிப்புக்கு பின், 7 கோடியே 36 லட்சம் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 30 கோடி பான் எண் இருக்கும் நிலையில், இதுவரை 7 கோடியே 36 லட்சம் பான் எண்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் வருமான வரிச்சட்டம் பிரிவு 139AA-ன் கீழ் யாருக்கு எல்லாம் ஆதார், பான் இணைப்பில் இருந்து விலக்கு அளித்துள்ளது என்ற பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,
1. என்ஆர்ஐ
2. இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள்
3. 80 வயது அல்லது அதற்கு அதிக வயது உள்ளவர்கள்
4. ஜம்மு & காஷ்மீர் மற்றும் மேகாலயா மாநிலங்களில் தனித்து வாழ்பவர்கள் - ஆகியோருக்கு ஆதார் இணைப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Loading More post
"ஈம சடங்கு நிகழ்ச்சிக்காவது அனுமதி கொடுங்க” - தெருக்கூத்துக் கலைஞர்கள் கோரிக்கை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
ப்ளஸ் 2 மொழிப்பாடத் தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் - தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழகத்தில் 7000- ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு!
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?