நீலகிரி மாவட்டம், மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் பூத்துக்குலுங்கும் ஸ்பெத்தோடியா எனும் சேவல் கொண்டை மலர்கள் இங்குவரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
இயற்கை எழில் சூழ்ந்த நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் இரு புறத்திலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும், மலைகளுக்கு இடையேயும் தேயிலை தோட்டங்களுக்கு இடையிலும் பூத்துக் குலுங்கும் 'ஸ்பெத்தோடியா’ என அழைக்கப்படும் சேவல் கொண்டை மலர்களின் சீசன் தற்போது களை கட்டியுள்ளதால், சாலையில் பயணிப்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
இந்த மலர்கள் நீலகிரியின், இரண்டாம் சீசன் காலமான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மிக அதிக அளவில் பூத்துக்குலுங்கும், சிவப்பு நிறத்தில் கொத்து கொத்தாய் மலர்ந்துள்ள இந்த மலர்களால் குன்னூர் மலைப்பாதை சிவப்பு கம்பளம் விரித்தது போல் காட்சியளிக்கிறது, மேலும் ஐரோப்பிய கண்டத்தை பூர்வீகமாக கொண்ட இவ்வகை பூக்கள் ஆங்கிலேயர் காலத்தில், குன்னூரில் அதிகளவில் நடவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரியில் தற்போது இரண்டாம் சீசன் நடைபெற்று வரும் நிலையில் சேவல் கொண்டை மலர்கள் சாலை ஓரத்தில் பூத்து குலுங்குவது, சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
Loading More post
குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முக்கியச் செய்திகள்: அச்சுறுத்தும் கொரோனா 2-ம் அலை முதல் சென்னை அணியின் வெற்றி வரை
தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்