ஒரு பரந்த புல்வெளியில் தாய் ஒட்டகச்சிவிங்கியும் குட்டியும் அமைதியாக உலவிக்கொண்டிருக்கின்றன. அந்த நேரத்தில் திடீரென கூட்டமாகப் பாய்ந்துவரும் சிவிங்கிப் புலிகள் குட்டியைத் தாக்க முனைகின்றன. இதுபற்றிய காணொலி சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா, இந்த 33 வினாடிகள் ஓடக்கூடிய காணொலியை அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒரு நெருக்கடியான சூழலில் குட்டியைக் காப்பாற்றி தாயன்பைப் பறைசாற்றும் தாய் ஓட்டகச்சிவிங்கியின் செயல் பலருடைய இதயங்களைத் தொட்டுள்ளது.
சிவிங்கிப் புலிகள் பாய்ந்து வரும்போது, தாய் அதைக் கண்டு அஞ்சாமல் காலைத் தூக்கிப் போராடுகிறது. அது துணிந்து நின்று குட்டியைக் காப்பாற்றும் காட்சி மெய்சிலிர்க்கவைக்கிறது. இந்த உணர்ச்சிகரமான காணொலி 9 ஆயிரம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. ஆயிரம் லைக்ஸ் குவிந்துள்ளது.
இதற்குக் கருத்துத் தெரிவித்துள்ள ஒரு பதிவர், "அம்மா என்பது அம்மாதான். அம்மாவின் அன்புக்கு நிகராக வேறு எதுவும் இல்லை" என்று எழுதியுள்ளார்.
I wonder from where a mother gets such courage ?
Here it protects its calf successfully against a coalition of Cheetahs ....
?John Temut pic.twitter.com/vEdYtxJeR3 — Susanta Nanda IFS (@susantananda3) September 18, 2020
Loading More post
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
தென்காசி: பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை... 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
"வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மகனுக்கு உத்தரவிடுங்கள்"-மோடியின் தாய்க்கு விவசாயி கடிதம்
“சி.எஸ்.கே-வில் வீரர்களை தக்கவைத்தது தான் தோனியின் ஸ்பெஷாலிட்டி” - கவுதம் காம்பீர்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!