திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வீரபள்ளி கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த வீரபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சுரேஷ். இவரது 5வயது மகன் கணிஷ், பக்கத்து வீட்டிலுள்ள சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளான். உடனே அங்கிருந்த சிறுவர்கள் ஓடிச்சென்று அருகில் இருந்தவரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனே அங்குவந்த அக்கம் பக்கத்தினர் கிணற்றில் குதித்து சிறுவனை தேட முயன்றனர். ஆனால் கிணற்றில் தண்ணீர் அளவுக்கு அதிகமாக இருந்ததால் அவர்களால் சிறுவனை மீட்க முடியவில்லை. அதனால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த திருப்பத்தூர் தீயணைப்புப்படை வீரர்கள் கிணற்றில் இருந்த தண்ணீரை மின்மோட்டார் மூலமாக வெளியேற்றி சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பின்பு சிறுவனை சடலமாக மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
"3 வேளாண் சட்டங்களை அனைத்து விவசாயிகளும் புரிந்து கொண்டால் நாடே பற்றி எரியும்”- ராகுல்
'அதிகாரிகள் அலட்சியம்'- 10 ஆண்டுக்குப் பின் நிரம்பிய ஏரி உடைந்து 100 ஏக்கர் பயிர்கள் நாசம்
குடியரசு தினத்தில் என்ன நடந்திருந்தாலும் விவசாயிகள் இயக்கத்தை நிறுத்த முடியாது: கெஜ்ரிவால்
“சீரியல்களில் நடிப்பதை குறைத்து இனி சரத்குமாருடன் முழு அரசியலில் ஈடுபடுவேன்”: ராதிகா
“மைனர் பெண்ணின் கையை பிடித்ததாலேயே ஒருவர் மீது போக்சோ பாயாது”- மும்பை உயர்நீதிமன்ற கிளை
ஆடைமீது தொட்டால் பாலியல் தொல்லை இல்லையா? - 'போக்சோ'வும் சர்ச்சைத் தீர்ப்பும்... ஒரு பார்வை
இணைப்பு முதல் ஓய்வு வரை... சசிகலாவுக்கு முன்னே 6 'வாய்ப்புகள்' - அடுத்து என்ன?
அதிரவைத்த இரட்டை கொலை, நகை கொள்ளை: டைம் டூ டைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை; நடந்தது என்ன?
டெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்!